17/06/2022 | aanmeega malar kurukkeluthu potti | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி


ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஜூன் 17, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | June 17, 2022 | Dinamalar Aanmeega Malar

இடமிருந்து வலம்

1. கடவுளிடம் நமக்குத் தோன்றும் உணர்வு (3)
3. சனீஸ்வரருக்கு உகந்த தானியம் (2)
4. திருமாலின் ஒரு பெயர் (2)
5. திருமறைக்காட்டில் திருநாவுக்கரசர் '---ணினேர் மொழியாள்' என்று தொடங்கும் பாடலைப் பாட மூடிய கோயில் கதவு திறந்தது (2)
6. மீனாட்சி அம்மனின் ஒரு பெயர் ------- வல்லி (4)
7. பிரம்மனின் முகங்களின் எண்ணிக்கை (3)
9. மலை சேர்த்தால் அருணாச்சலேஸ்வரர் (3)
10. சிவன் சன்னதிக்கு எதிரே காணப்படுபவர் (3)
12. கடலால் சூழப்பட்டது என்பதால் --------சூழ் உலகு என்பார்கள் (2)
13. போர்த் தொடக்கத்திலும் இதைக் கேட்கலாம். வெற்றி முழக்கமாகவும் இதைக் கொள்ளலாம் (4)
14. முருகனை ---மருகன் என்பதுண்டு (2)
16. தேரோட்டியாய் கண்ணன் (7)
18. வீடு கட்டும்போது அனுசரிக்கப்படுவது ------- சாஸ்திரம் (3)
19. சிவபெருமானின் உறைவிடம் (4)
20. சிதம்பரத்தில் பூச்சி அரித்த நிலையில் இருந்த ________சுவடிகளை மீட்டவர் நம்பியாண்டார் நம்பி (3)

மேலிருந்து கீழ்

1. தாமரையில் காணப்படுவதால் லட்சுமிதேவியை ________வாசினி என்பதுண்டு (3)
2. திருநாவுக்கரசரை சைவ சமயத்துக்கு மீட்ட அவரது சகோதரி (5)
3. திருவாரூர் மாவட்டத்தில் பிரபல முருகன் கோயில் அமைந்த கிராமம் (4)
4. சிவபெருமான் (3)
8. மூலசக்தியை சித்தர்கள் இப்படியும் குறிப்பிடுவார்கள் (5)
9. கோட்டையைச் சுற்றி உள்ள நீர்நிலை (3)
10. சடகோபன் என்றும் அழைக்கப்பட்ட 'பன்னிரு திருமால் பக்தர்களில்' ஒருவர் (6)
11. சிக்கல் எனும் தலத்தில் அருள்கிறார் வேலன் (4)
12. பாலகன் கண்ணன் வளர்ந்த கோகுலத்தை ---பாடி என்றும் அழைப்பதுண்டு (3)
15. 'அதரம் மதுரம், -----, மதுரம், நயனம் மதுரம்' எனத் தொடங்குகிறது வல்லபாச்சார்யர் எழுதிய மதுராஷ்டகம் (4)
16. அயோத்தியை பரதன் ஆளவில்லை. அப்போது ராமனின் ----- ஆண்டது! (3)
17. இந்த மரம் அதிகமாகக் காணப்பட்டதால் சிதம்பரம் இப்படி அழைக்கப்பட்டது (3)

Comments